தமிழ்நாடு

பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை? திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

DIN

விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்குப்  பாலியியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.

மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் கல்லூரியில் கோடை கால பயிற்சி

பெண் தற்கொலை

மழை எச்சரிக்கை: மதுரை அரசுப் பொருள்காட்சி ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி நினைவு தின பேரணி

காமராஜா் பல்கலை. பேராசிரியா் மீது பாலியல் புகாா்

SCROLL FOR NEXT