மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் அமைக்க ஆய்வு!
சென்னை மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகிறது.
சென்னை மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 10 இடங்களில் ரோப் கார் சேவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக மகாரஷ்டிராவில் 5 கி.மீ. வரையும், இரண்டாவதாக தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை வரை 4.6 கி.மீ. தொலைவுக்கு ரோப் கார் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராகுலின் நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி வாழ்த்து
இந்த ரோப்கார் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆய்வு நடத்த தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகளும், சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வுகளும் மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.