செகந்திராபாத் முதல் ராமநாதபுரம் வரை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு புதன்கிழமை (ஜன.4) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதிலிருந்து புதன்கிழமை தோறும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07695) இயக்கப்படவுள்ளன. செகந்திராபாத்திலிருந்து ஜன.4, 11, 18 மற்றும் 25 தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமை தோறும் ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்:07696) ஜன.6, 13, 20 மற்றும் 27 தேதிகளில் இயக்கப்படவுள்ளன.
ராமநாதபுரத்தில் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இந்த ரயில் சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுத்துறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, அதிரம்பட்டினம், புதுக்கோட்டை, அரந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, வழியாக இயக்கப்படுகின்றன.
இதற்கு புதன்கிழமை (ஜன.4) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.