திருப்பதி வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கு சேலத்திலிருந்து 5 டன் பூக்கள்!
திருமலை திருப்பதியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருமலை திருப்பதியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருமலை திருப்பதியில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் சேலத்தில் இருந்து மனமுள்ள மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டு அனுப்பப்படுவது வழக்கம்
இதன் அடிப்படையில் சேலம் பக்திசாரர் பக்த சபா சார்பில் திருமலை திருப்பதிக்கு வைகுண்ட ஏகாதசி யொட்டி பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி சேலம் பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
Advertisement
Advertisement
இதற்காக ஏராளமானோர் மனமுள்ள மலர்களை வழங்கினர். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மண்டபத்தில் நீண்ட வரிசையில் அமர்ந்து மனமுள்ள மலர்களை மாலையாக தொடுத்தனர்
இதில் சாமந்தி, சம்பங்கி, அரளி, ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு மணமுள்ள மலர்கள் மாலையாக தொடுக்கப்பட்டது. இதற்காக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருமலை திருப்பதிக்கு தொடுக்கப்படும் மாலைகள் தங்கள் கைகளால் மாலையா கட்டப்படுவது மிகுந்த மனமகிழ்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் கொடுக்கும் மாலை சுவாமிக்கு அலங்காரம் செய்யும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்தது போல எண்ணுவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
சுமார் 500 டன் மனமுள்ள மலர்கள் இன்று திருமலை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களும், காய்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஜன. 10ல் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம்!
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சேலம் பக்தி சாரர் பக்த சபா இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.