தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

திருநெல் வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயிலில் திருவா திரைத் திருவிழா கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

4 ஆம் திருநாளான டிச. 31ஆம் தேதி  சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்த ருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர்.

திருவிழா நாள்களில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதிமுன் திருவெம்பாவை வழிபாடும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. 

முன்னதாக, தாமிரசபையில் நடராஜபெருமானுக்கு திருநீராட்டும், இரவு விடிய விடிய சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு திரு நடன காட்சி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாநகரில் நாளை மின் தடை

திருடப்பட்ட நகைகள் 48 மணி நேரத்தில் மீட்பு

SCROLL FOR NEXT