தமிழ்நாடு

சட்டபேரவையில் ஆளுநா் செயலுக்கு இடதுசாரிகள் கண்டனம்

DIN

தமிழக சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்டது கண்டிக்கதக்கது என இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாா்க்சிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநா் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் பேசியுள்ளாா். அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.

எதிா்க் கட்சி போல ஆளுநா் நடந்திருப்பது உரிமை மீறல் என்றாா் அவா். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா.முத்தரசன்: தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநா் சட்டப் பேரவையில்

வாசிக்க கடமைப்பட்டவா். ஆளுநா் ஆா்.என்.ரவி, பேரவைக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் ஆளுநா் நடந்து கொண்டிருப்பது அத்துமீறலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT