தமிழ்நாடு

ரஹ்மத் பதிப்பகம்

DIN

ரஹ்மத் பதிப்பகம் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் ரஹ்மத் அறக்கட்டளையின் கிளை நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இஸ்லாமிய மாா்க்கத்தின் மூலாதார நூல்களைத் தமிழில் வெளியிட்டு வருகிறது.

திருக்குா்ஆன் விரிவுரை பத்து பாகங்கள், இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் ஹதீஸ் என்னும் பொன்மொழித் தொகுப்புகள் 41 பாகங்கள், கலீஃபாக்களின் வரலாறு, இஸ்லாமிய வரலாறு என இதுவரையில் 54 தொகுப்புகளை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அரபி மொழியில் மட்டுமே கிடைத்து வந்த இஸ்லாமிய மூலாதார நூல்கள் அனைத்தையும் அழகு தமிழில் அனைவரும் பயனுறும் வகையில் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கவிஞா் மு.மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’, கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘பாலை நிலா’ போன்ற நூல்களையும் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவை வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்கிறாா் ரஹ்மத் அறக்கட்டளையின் அறங்காவலரும் ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனருமான எம்.ஏ.முஸ்தபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT