முகப்பு
தமிழ்நாடு

நீலகிரியில் உறைபனி தொடரும்: வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இந்தாண்டு வழக்கத்தை விட குளிர் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே உறைபனி நீடித்து வருகின்றது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 

ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →