முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி!

விருதுநகர், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
பகிர்:

விருதுநகர், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி(60) குருசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ், ஆசீர்வாதம் என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →