அண்ணாமலை 
தமிழ்நாடு

ஈரோடு தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? - இன்றைய கூட்டத்தில் முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவு என்ன என்பது குறித்து கடலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. 

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவு குறித்து கடலூரில் இன்று நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அரசியலில் சூழலைக் கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கடலூரில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறது.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT