தமிழ்நாடு

திண்டுக்கல்லில் ஜன. 27-ல் உள்ளூர் விடுமுறை!

DIN


பழனி முருகன் கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜனவரி 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஜனவரி 27ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. 

இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். 

விடுமுறையால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வெள்ளிக்கிழமை இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT