தமிழ்நாடு

சென்னையில் நாளைவரை ‘ட்ரோன்கள்‘ பறக்கத் தடை!

DIN

குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) முதல் இரு நாள்கள் ‘ட்ரோன்கள்‘ பறக்கவிடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா காமராஜா் சாலையிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஜன.26-ஆம் தேதி 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

சென்னை முழுவதும் 6,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு கருதி ஜன. 25, 26ஆகிய தேதிகளில் சென்னையில் ‘ட்ரோன்கள்‘ பறக்க விடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளான திருவொற்றியூா், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது. ஜன.26-ஆம் தேதி வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT