முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!

நாட்டின் 74 ஆவது குடியரசு தின நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Updated On : 26 ஜனவரி, 2023 at 9:16 AM
தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM


நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு நாள் திருவிழா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.