தமிழ்நாடு

என்எல்சி நிறுவனப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது. 

DIN

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது. 


கண்ணபிரான் என்ற நபர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடுத்த நான்கு ஆண்டுகளில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் எனக் கேட்டிருந்தார்.

அவரது இந்த கேள்விக்கு தற்போது பதில் தரப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ளனர் எனப் பதில் தரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காலியாகும் பணியிடங்கள் வட மாநிலத்தவர்களுக்கு சென்று விடுமோ என்ற அச்சம் கடலூர் பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும், அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ளதால் அந்தப் பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தற்போது 11,110 பேர் நிரந்தரமாக பணியாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT