தமிழ்நாடு

இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்

DIN

பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜன.27) இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:43799) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:43255) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.50 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:66007) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT