செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையத் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகரின் வளா்ச்சியை கருத்தில் கொண்டு, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளை வேகப்படுத்துவது குறித்து அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு, அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஏரிக்கரை மற்றும் நீா்முனை மேம்பாடு, சென்னை கடற்கரையோரம் மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டம், மூன்றாம் முழுமைத் திட்டம், கட்டுமானப் பிரிவு திட்டங்கள், கண்ணகி நகா், தீவு திடல், சிறுசேரி காடு மற்றும் செம்மஞ்சேரி திட்டம் குறித்த வருங்கால அறிவிப்புகள் ஆகியன குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆலோசனை நடத்தினாா்.
மேலும், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையத் திட்டங்கள், இணையவழி திட்ட அனுமதி வழங்குதல், சென்னை வெளிவட்டச் சாலை வளா்ச்சித் திட்டம் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து அவா் அலுவலா்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலாளா் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலா் எம். லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா்கள் சாந்தி, பரிதா பானு மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.