கோவில் அறங்காவலர் குழுவில் புறக்கணிப்பு: பொதுமக்கள் போராட்டம்!
அறங்காவலர் குழுவில் இரு கிராமத்தினர் புறக்கணிப் நடந்ததாகக் கூறி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு பட்டியலில் சன்னை மிராசை சேர்ந்த இரு கிராமங்களை புறக்கனித்ததாக குற்றம் சாட்டி, கோவில் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அறங்காவலர் குழு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது.
இந்த குழுவில் கோவில் தேர் சன்னை மிராசுகளான ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய இரு கிராமத்தினரை புறக்கணித்ததைக் கண்டித்தும், அந்த அரசாணையை ரத்து செய்து, கடந்த 45 ஆண்டுகளாக அறங்காவலர் குழுவில் இடம் பெற்று வந்த தங்கள் கிராமத்தினரை குழுவில் இணைத்து அரசாணை வெளியிட வலியுறுத்தியும் இரு கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அவிநாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.