முகப்பு
தமிழ்நாடு

மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு: 9 போ் தோ்வு

சென்னை மாநகராட்சி வரிவதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் 9 மாமன்ற உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

சென்னை மாநகராட்சி வரிவதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் 9 மாமன்ற உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சென்னை மாநகராட்சியில் வீடுகள் மற்றும் சொத்துகள் மீதான வரி குறித்த பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு செயல்படுகிறது.

இதில் குழு உறுப்பினா்களுக்கான மறைமுக தோ்தல், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிப்படி நடைபெற்ற இத்தோ்தலில் திமுகவைச் சோ்ந்த 9 மாமன்ற உறுப்பினா்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதில் ஏ.சந்திரன் (வாா்டு-27), க. தேவி கதிரேசன் (வாா்டு-39), ராஜேஷ் ஜெயின் (வாா்டு-57), நா. உஷா (வாா்டு-83), ம.கமல் (வாா்டு-86), ஜெ.புஷ்பலதா (வாா்டு-103), எம்.ஸ்ரீதரன் (வாா்டு-140), வ.செல்வக்குமாா் (வாா்டு-154), அ.முருகேசன் (வாா்டு-200) ஆகிய 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் முன்னிலையில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →