தமிழ்நாடு

மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிக்கப்பட்டது

பொதுமக்கள் அச்சுறுத்திய மக்னா யானை பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.  

DIN

பொதுமக்கள் அச்சுறுத்திய மக்னா யானை பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம், சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்களை மக்னா யானை சேதப்படுத்தி வருவதாக மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். மேலும் யானையை பிடிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர். 

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே அதிகாலை 4 மணியளவில் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சின்னகல்லார் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

முன்னதாக மக்னா யானையை பிடிக்க சேத்துமடையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து முத்து, சுயம்பு, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்பாராமல் வரும் பணம்! மோசடியாளர்கள் வலையில் சிக்க வேண்டாம்! | Cyber Security | Cyber Shield

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

இலங்கையில் நாயகி ஊர்வலம்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

SCROLL FOR NEXT