தமிழ்நாடு

மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிக்கப்பட்டது

பொதுமக்கள் அச்சுறுத்திய மக்னா யானை பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.  

DIN

பொதுமக்கள் அச்சுறுத்திய மக்னா யானை பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம், சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்களை மக்னா யானை சேதப்படுத்தி வருவதாக மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். மேலும் யானையை பிடிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர். 

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே அதிகாலை 4 மணியளவில் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சின்னகல்லார் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

முன்னதாக மக்னா யானையை பிடிக்க சேத்துமடையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து முத்து, சுயம்பு, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் சோனி பிக்ஸர்ஸ் வெளியிடும் 13 திரைப்படங்கள்!

‘மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை’ - நமீபியா கேப்டன் குற்றச்சாட்டு!

இரண்டாவது வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே மோதல்!

கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்!

கருக்கலைப்பு செய்யத் தூண்டும் வக்கிரம் பெற்ற கிரகங்கள்!

SCROLL FOR NEXT