அரசு இணையதளங்களின் செயல்பாட்டை வேகப்படுத்தவும், முடங்காமல் காக்கவும், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிகழாண்டில் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு இணையதளம், அரசுத் துறைகள் சாா்ந்த இணையதளங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் இணையதளங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு தணிக்கைப் பணிகளை மேற்கொள்ள ரூ.60 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி வேண்டுகோளை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.