ரோந்து பணியின்போது ஓசியில் பிரெட் ஆம்லெட், டீ: 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
தாம்பரம் அடுத்த படப்பை அருகே இரவு ரோந்து பணியின்போது கடையில் ஓசியில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம்
தாம்பரம்: தாம்பரம் அடுத்த படப்பை அருகே இரவு ரோந்து பணியின்போது கடையில் ஓசியில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரவு ரோந்து பணியின்போது கடையில் ஓசியில் டீ, ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லெட், குடிநீர் கேன் வாங்கிக் கொண்டு, அதற்கான பணம் தர மறுத்து தகராறு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.