முகப்பு
தமிழ்நாடு

பட்டமளிப்பு விழா விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம்

பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:06 PM
ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
பகிர்:

பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழக பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநா் தேதி தராததால் மாணவா்கள் பாதிக்கப்படுவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறியிருந்தாா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, தமிழகத்தில் இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரி இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளாா். 
இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மாணவரணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் ஆளுநர் மாளிகை அருகே சின்னமலை சாலை சந்திப்பில் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநதர் ஒப்புதல் தராததற்கும் கூட்டறிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →