முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி கைதுக்கு கார்கே கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
மல்லிகார்ஜுன கார்கே
பகிர்:

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.

17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து கார்கே வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மோடி அரசின், அரசியல் துன்புறுத்தல், பழிவாங்கல் நடவடிக்கை இது. இதுபோன்ற நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் யாரும் அஞ்சமாட்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமலாக்கத்துறையின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று இரவு கார்கே அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →