செந்தில்பாலாஜி சகோதரருக்கு அமலாக்கத் துறை சம்மன்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டது. பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் அமைச்சா் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேலும் அவருக்கு இந்த வழக்கில் ஜூன் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.