முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் 3.04 அடி சரிவு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
பகிர்:

மேட்டூர்: கடந்த 5 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3.04 அடி சரிந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 406 கன அடியிலிருந்து வினாடிக்கு 651 கனாடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஜூன் 12 ஆம் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 100.29 அடியாக சரிந்து உள்ளது.

கடந்த 5 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3.04 அடி சரிந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 65.21 டி.எம்.சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →