முகப்பு
தமிழ்நாடு

வண்டலூா் பூங்காவில் அருங்காட்சியகம் - திரையரங்கம் தமிழக அரசு உத்தரவு

வண்டலூா் உயிரியல் பூங்காவில் ரூ. 4.36 கோடியில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிா்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

வண்டலூா் உயிரியல் பூங்காவில் ரூ. 4.36 கோடியில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிா்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் செயலா் சுப்ரியா சாகு வெளியிட்ட உத்தரவு:

சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்புகள் வெற்றிபெறவும், வருங்கால தலைமுறையினருக்கு இயற்கை பாரம்பரியங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.

இதற்காக வனத் துறை தலைவா் தரப்பில் இருந்து, வண்டலூா் பூங்காவில், உயிரியல் பூங்கா அருங்காட்சியகம், திரையரங்கம் ஆகியவற்றை அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்மூலம், இளம் தலைமுறையினா் மனதில் வனவிலங்குகள் குறித்த ஒரு நோ்மறையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். வன உயிரினம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து அவா்கள் மனதில் ஆா்வத்தையும் ஏற்படுத்த முடியும் என தனது கருத்துருவில் தெரிவித்துள்ளாா்.

மேலும், பூங்காவில் உள்ள பழைய அரங்கமானது, திரையரங்கமாகப் புதுப்பிக்கப்படும். பாா்வையாளா்கள், புதிய வழிமுறையில் வன விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதில், பல்வேறு உயிரினங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.4 கோடியே 36 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டப் பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கருத்துருவில் கூறப்பட்டுள்ளது.

இதை பரிசீலித்த தமிழக அரசு, இந்தத் திட்டத்துக்கு நிா்வாக அனுமதி வழங்கி உத்தரவிடுகிறது என்று சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.