இன்று சிறப்பு மருத்துவ முகாம்: 1 லட்சம் பேருக்கு சிகிச்சை வழங்க திட்டம்
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகளும், பரிசோதனைகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகளும், பரிசோதனைகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கென, மருத்துவப் பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் 30 துறைகளை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
சென்னையை பொருத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. ஏற்கெனவே 5 மண்டலங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சாா்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மண்டலங்களில் மண்டலத்துக்கு ஒரு இடம் வீதம் 10 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 90 இடங்களிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும்.
காசநோய் கண்டறிவதற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 28 வாகனங்களும், அதிநவீனமருத்துவ உபகரணங்களுடன் கூடிய தனியாா் வாகனங்களும் அப்போது பயன்படுத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு முகாமிலும் பல்வேறுதுறை மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் இருப்பாா்கள். முகாம்களில் இசிஜி, எக்கோ, ரத்தக் கூறுகள் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். உயா் சிகிச்சை தேவைப்படுபவா்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். இந்த முகாம்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து அட்டைகள் வழங்கப்படும். ஒவ்வொரு முகாமில் சுமாா் 1,000 போ் பயனடைவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.