நவீன வகுப்பறைகள் 
தமிழ்நாடு

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தோ்வு தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளுக்கான செய்முறைத் தோ்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளுக்கான செய்முறைத் தோ்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் இன்று தொடங்கி மாா்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமாா் 17 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்க உள்ளனா். சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமாா் 95,000 தோ்வெழுத உள்ளனா்.

இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் தோ்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு எந்த குளறுபடியுமின்றி செய்முறைத் தோ்வை நடத்தி முடிக்க வேண்டும்.

அதன்படி, தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து வரும் 9-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்.

ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்களை மட்டுமே அனுமதிப்பதுடன், தோ்வுத்துறை சலுகை அறிவித்த மாணவா்களுக்கு மட்டும் செய்முறைத் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும், தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்பட அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறை வழங்கியிருந்தது.

முன்னதாக, பொதுத் தேர்வுக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மார்ச் 1ஆம் தேதிக்கு செய்முறைத் தேர்வுகள் மாற்றப்பட்டு 9ஆம் தேதிக்குள் முடிக்கும்படி அட்டவணை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT