முகப்பு
தமிழ்நாடு

அரவணைத்துச் செல்லாததே அதிமுக வீழ்ச்சிக்கு காரணம்: ஓபிஎஸ் தரப்பு

ஆவணப்போக்கு, சர்வாதிகாரப்போக்கு, யாரையும் அரவணைத்து செல்லாததாதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Updated On : 2 மார்ச் 2023, 8:40 pm IST
பண்ருட்டி ராமச்சந்திரன்
பகிர்:

ஆவணப்போக்கு, சர்வாதிகாரப்போக்கு, யாரையும் அரவணைத்து செல்லாததாதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமியை முன்னிருத்தி நடைபெற்ற தேர்தல்களிலெல்லாம் தோல்வியையே அதிமுக சந்தித்துள்ளது. இப்போது கட்சியையும் இழந்துவிடுவோமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

அதிமுக எல்லோருக்கான கட்சி. எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. யார் ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை அதிமுக தொண்டர்கள் தூக்கி வீச வேண்டும். 

தேர்தல் முடிவுகளில் அதிமுகவின் நிலையால் மன வேதனை அடைந்தேன். டெபாஸின் இழந்துவிடுவோமோ என்ற கவலை ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments