தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் முன்னிலை: திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

DIN

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் 39 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். 

அதிமுக வேட்பாளர் தென்னரசு 13,500 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 1,800 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், தேமுதிகவின் எஸ்.ஆனந்த் 220 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். 

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதையொட்டி திமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் கௌதம் கம்பீர்?

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை தேடும் ராஜஸ்தான் காவல்துறை!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி!

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி!

நியூசிலாந்து கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன்; டிரண்ட் போல்ட்டுக்கு கேன் வில்லியம்சன் புகழாரம்!

SCROLL FOR NEXT