தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இடைத்தேர்தல் வெற்றி: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

DIN

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது. வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து எனது பணிகளைத் தொடருவேன். 

தேர்தல் ஆணைய நடத்தைகளில், வாக்குப்பதிவில் எந்தவித தவறும் நடைபெறவில்லை என கூறியவர் தென்னரசு. ஆனால் தற்போது பணநாயகம் வென்றதாக தோல்வி விரக்தியில் எதிர்மாறாக பேசுகிறார்.

எனது மகன் இருந்து செய்ய வேண்டிய பணிகளை தொகுதி மக்களுக்காக நான் செய்வேன். முதல்வரை விரைவில் சென்று சந்திக்க வேண்டும். மக்களவைக்கு பெரிய அணி உருவாக வேண்டும். காங்கிரஸ் இருந்தால்தான் அந்த கூட்டணிக்கு மரியாதை கிடைக்கும். மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம்தான் ஈரோடு கிழக்குத்தொகுதியில் கிடைத்துள்ள வெற்றி எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT