தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதியில் முறையான சாலை வசதி வேண்டி வ.உ.சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்-மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகர் பகுதியில் 3 ஆவது மைல் பகுதியில் இருந்து மில்லர்புரம் வரை சாலை, புதிய பேருந்து நிலையத்திலிருந்து விவிடி சிக்னல் வரை உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மாணவர்-மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல இயலவில்லை.
சாலை வசதி செய்துதரக் கோரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கில் 25,033 வாக்குகளுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!
எனவே, சாலைகளை பராமரித்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியே வந்த மாணவர்-மாணவிகள் முறையான சாலை வசதி செய்துதரக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.