தமிழ்நாடு

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத் தீ

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து சாம்பலாகின.

DIN


கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து சாம்பலாகின.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மசினகு பகுதியில் மதியம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் அதனைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வெப்பம் அதிகமாக இருந்ததால், காட்டுத் தீ மளமளவென எரிந்து பல நூறு ஏக்கர் பரப்பிலான காடுகள் சாம்பலாகின.

மரவகண்டி அணையின் கரை ஓரத்தில் உள்ள மூங்கில் காட்டில் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீயை அணைக்க 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT