முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மார்ச் 10-ல் சிறப்பு காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு  காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு  காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  தெரிவித்ததாவது.

இந்தியா முழவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் உயிரிழப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவது இல்லை. 

முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கரோனா வழிகாட்டுதலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.