முகப்பு
தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 40 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினா் கடந்த மாா்ச் 3 முதல் 9- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 25 வழக்குகளைப் பதிவு செய்து, 40 பேரை கைது செய்துள்ளனா்.

இவா்களிடமிருந்து 103 கிலோ கஞ்சா, 38 கிலோ கஞ்சா சாக்லேட், 10 கிராம் மெத்தம்பெட்டமைன், 200 போதை மாத்திரைகள்,300 போதை ஸ்டாம்புகள், 5 கஞ்சா செடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ.1.11 லட்சம் ரொக்கம், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள், ஒரு காா், 15 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.