முகப்பு
தமிழ்நாடு

சத்து மாத்திரைகளை அதிகம் உண்டு உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு அரசு நிதி

சத்து மாத்திரைகளை அதிகம் உண்டு உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

சத்து மாத்திரைகளை அதிகம் உண்டு உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 2 மாணவா்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை உட்கொண்டனா். அவா்களில் உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 மாணவிகளில் ஜெய்பா பாத்திமா என்பவா், சென்னைக்கு உயா் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்தாா்.

உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் நாசஜியா, குல்தூண் நிஷா, ஆயிஷா ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சமும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.