தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது!

DIN


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 

2022-2023-ம் ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,88,64 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். 

தமிழக பள்ளிகளில் மட்டும் 3,60,908 மாணவர்கள் மற்றும் 4,12,779 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,73,688 இன்று தேர்வெழுதுகின்றனர். 

புதுச்சேரியில் 6,799 மாணவர்கள், 7,577 மாணவிகள் என மொத்தம் 14,376 பேர் தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 5,338 பேரும், மாற்றுத்திறனாளிகள் 5,835 பேரும், 125 சிறைவாசிகளும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வுப் பணிக்காக 43,200 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT