தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 

DIN


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 

2022-2023-ம் ஆண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,88,64 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். 

தமிழக பள்ளிகளில் மட்டும் 3,60,908 மாணவர்கள் மற்றும் 4,12,779 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,73,688 இன்று தேர்வெழுதுகின்றனர். 

புதுச்சேரியில் 6,799 மாணவர்கள், 7,577 மாணவிகள் என மொத்தம் 14,376 பேர் தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 5,338 பேரும், மாற்றுத்திறனாளிகள் 5,835 பேரும், 125 சிறைவாசிகளும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வுப் பணிக்காக 43,200 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT