தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் பலி: கமல்ஹாசன் இரங்கல்

DIN

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட இரு ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு கமெங் மாவட்டத்தின் திராங் அருகேயுள்ள மண்டலா பகுதியில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி.ரெட்டி, துணை விமானி ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.  

இதனிடையே மேஜர் ஜெயந்தின் உடல், தில்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு மதுரை கொண்டுவரப்பட்டு, பெரியகுளம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தில் நாளை அடக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் ஊழியா் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT