ராணிப்பேட்டையில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்
ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான 3 வார கோடைகால பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
ராணிப்பேட்டையில் கிரிக்கெட் வீரர்களுக்கான 3 வார கோடைகால பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டத்தைச் சேர்ந்த 19,16,14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான மூன்று வார கோடை காலப் பயிற்சி முகாம் ராணிப்பேட்டை பாரி கிளப் விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்த பயிற்சி முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து, இந்த மூன்று வார கால பயிற்சி முகாமை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர்கள் டி.கே.குமார்,நாராயணசாமி, லட்சுமணன், நடராஜன், பயிற்சியாளர் ஜானகிராமன், இணை பயிற்சியாளர்கள் ஜெகன் பாபு, தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.