94 வயது மூதாட்டியின் கண்கள் தானம்
ஊத்தங்கரை அருகே உயிரிழந்த 94 வயது மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:25 PM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே உயிரிழந்த 94 வயது மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எல்ஐசி கிளை அலுவலகம் அருகே உள்ள (அரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை) காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அன்னாள் பொன்னியம்மாள் (94).
இவர், வயது மூப்பின் காரணமாக மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் உயிரிழந்தார்.
Advertisement
இதையடுத்து அவரது கண்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வழங்கினர்.
மறைந்த அன்னாள் பொன்னியம்மாளுக்கு மகன்கள் கு. குணசேகரன், மருத்துவர் கு. கமலநாதன், தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன், மகள் திராவிடர் செல்வி ஆகியோர் உள்ளனர்.