தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றம் குறித்து துரைமுருகன் விளக்கம்!

DIN

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராபரமே  என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சில அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பல்வேறு முக்கிய பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மூத்த அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் இன்று நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் இன்று ஆளுநரை சந்திக்க போவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். மேலும், அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராபரமே என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT