முகப்பு
தமிழ்நாடு

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மாறியது மோக்கா!

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மோக்கா உருவெடுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
கோப்புப்படம்
பகிர்:

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மோக்கா உருவெடுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 கி.மீ. வேகத்தில் நகரும் மோக்கா புயல் 14 ஆம் தேதி வங்கதேசம் - மியான்மர் இடையே அதி தீவிர புயலாகவே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோக்கா புயல் கரையை கடக்கும்போது 175 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளி முதல் திங்கள்கிழமை (மே 15) வரை 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.