வரும் 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடக்க உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடக்க உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.5.2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.
அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.