தி.நகர் ஆகாய நடைமேடையை முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்!
சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைமேடையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:27 AM
சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைமேடையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
தி.நகர் பேருந்து நிலையம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைமேடையை நாளை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தி.நகரில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகம் இருந்து கொண்டே இருக்கும். இங்கு வாகன நெரிசல் அதிகம் உள்ளதால் மக்கள் நடமாட கடும் சிரமாக இருக்கும்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை ஆகாய நடைமேடையை திறந்து வைக்கவுள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: தளபதி 68: வெங்கட் பிரபு இயக்குகிறாரா?
கரோனா காரணமாக பாலம் அமைக்கும் பணிகள் சிறிது தடைபட்ட நிலையில், மீண்டும் பணிகள் வேகமாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.