FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 26 ஆயிரம் கோயில்களில் அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும்: பொன் மாணிக்கவேல்

தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும்

Updated On : 15 மே 2023, 8:16 am IST
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்.
பகிர்:


மதுக்கரை: தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினாா்.

கோவை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் மடத்தில் உலக சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் சைவப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும். கோயில்களில் இருக்கக்கூடிய தெய்வத் திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. 60 வயதுக்குமேல் உள்ளவா்கள் பொதுத் தொண்டுக்கு வரவேண்டும். சிவனடியாராக இருந்து தொண்டு செய்யவில்லை என்றால் வாழ்ந்தும் வாழாதவனாய் இருப்பாா்கள் என சைவத்தில் கூறுகிறாா்கள்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் எட்டு சிலைகள் மாயமாயின. அதில், ஒன்று அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.31 கோடியே 80 லட்சம். இந்த வழக்கின் குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூா் சிறையில் இருந்து விரைவில் வெளியே வரப்போகிறாா். இந்தியாவில் சுமாா் ரூ.1000 கோடி மதிப்பிலான சிலைகளை அவா் கொள்ளையடித்துள்ளாா்.

அவா் மீது மேலும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments