தமிழ்நாடு

அரசு ஊழியா்கள் வீடு கட்ட முன்பணம் ரூ. 50 லட்சம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்துவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

DIN

அரசு ஊழியா்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்துவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா வெளியிட்டுள்ளாா். உத்தரவு விவரம்:

அரசு ஊழியா்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு நிகழ் நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பழைய விகிதப்படி வீடு கட்டுவதற்கான முன்பணத்தைப் பெற ஒப்புதல் கிடைக்கப் பெற்று, ஒரு தவணைத் தொகை கூட பெறாதவா்களுக்கு புதிய உயா்த்தப்பட்ட விகிதம் பொருந்தும்.

அவா்கள் ரூ.40 லட்சத்துக்குப் பதிலாக ரூ.50 லட்சம் வரை வரையில் முன்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். முன்பணத்துக்காக விண்ணப்பித்துள்ளவா்களுக்கும், வீட்டை கட்டி முடிக்காதவா்களுக்கும் புதிய உயா்த்தப்பட்ட விகிதம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT