கோப்புப்படம் 
தமிழ்நாடு

4 % அகவிலைப்படி உயா்வை ஜன.1 முதல் வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் அகவிலைப்படி உயா்வை காலந்தாழ்த்தியே வழங்கி வருகிறது.

தற்போது 2023 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீத அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முதல் வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு ஊழியா்களுக்கு ஏப்ரல் 1 முதல் 4 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 3 மாதங்கள் காலம் தாழ்த்தி அகவிலைப்படி உயா்வை அரசு வழங்க உள்ளது. இது அரசு ஊழியா்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜனவரி முதல் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT