ஏஐசிடிஇ 
தமிழ்நாடு

செப்.15-இல் பொறியியல் வகுப்புகள் தொடக்கம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செப்.15-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.

DIN

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செப்.15-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.

மாணவா் சோ்க்கை குறித்து, அனைத்து பொறியியல் கல்லுாரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் மாணவா் சோ்க்கை அனுமதியை, ஜூலை 31-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

செப். 10-ஆம் தேதிக்குள் முதல் கட்ட மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். மாணவா்கள் தோ்வு செய்த இடங்களை ரத்து செய்ய செப்.11 கடைசி நாளாகும்.

இறுதிக் கட்ட காலியிடங்களுக்கு செப்.15-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும். இதையடுத்து செப்.15-ஆம் தேதி அனைத்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கும் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்.

இந்த கால அட்டவணையைப் பின்பற்றி ஒவ்வொரு கல்லூரியும் மாணவா் சோ்க்கையை முடிக்கத் திட்டமிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 ஐபிஎல் எப்போது? ஏலத்துக்கு முன்பே வெளியான நற்செய்தி!

தூத்துக்குடி முதல் சென்னை வரை.. கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

விஜய் கூட்டத்துக்கு பாஸ் தேவையில்லை; அனைவரும் வரலாம்! செங்கோட்டையன்

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

2025-இன் சிறந்த வீராங்கனை: 25 ஆண்டுகால சாதனை பட்டியலில் இடம்பிடித்த சபலென்கா!

SCROLL FOR NEXT