தமிழ்நாடு

கள்ளச்சாராய பலி 23 ஆக உயர்வு! மரக்காணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

DIN

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.    

இதில் முதலில் 15 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 

பலி எண்ணிக்கை 22 ஆக இருந்த நிலையில் எக்கியாா்குப்பத்தைச் சேர்ந்த கன்னியப்பன்(50) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் பலி 23 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மரக்காணத்தில் 15 பேரும்,  மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 60 பேர் வரையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே, கள்ளச்சாராயம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் இதனை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்?

திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

இலங்கையில் திவ்யபாரதி..!

SCROLL FOR NEXT