தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்!

2023-2024 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் சில உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சில பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. 

DIN

2023-2024 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் சில உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சில பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு(2023-2024) முதல் பல்கலைக்கழகத்தின் சில உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் சில இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT